Wednesday, April 28, 2010

What did i do to you???

   
 
Miraculous evening !!!! You touched me like a arrow,
swang in my breathe and entered my heart,
Though uninvitated my doors opened for you,
Like autumn, you left without noise emptying me with my soul.
What did i do to you???

சிறை

பேருந்தில்  பல முகங்கள், எனக்கு மட்டும் நீ எங்கும்..
நடை பயணத்தில் கை கொர்கிறாய் நீ காற்றாக..
எத்தனை முகங்கள் உனக்கு என் சிந்தையில்
ஏன் தவிக்கவிட்டு சென்றாய் தனிச்சிறையில்.....


நீ என்னை மறந்தாலும்

நிழலுக்காக ஓதுங்கவில்லை நான்


நினைவால் ஒதுங்குவதற்கு…

மேகமாய் நான் பயணித்து பிரிந்தாலும் நான் வசிப்பது
வான் போன்ற உன் இதயத்தில்!!!!!

Sunday, April 18, 2010

நீர் துளி

                                                 

                                                   
 
ஒட்டாமல் ஓடும் நீர் துளி நீ...

உன் பிரிவினால் வாடும் இலை நான்...

க்ரஹனம்

நிலவை போல் நீ உறங்க துடிக்க
சூரியனை போல நான் எழ துடிக்க
அவை இரண்டும் சந்திப்பது க்ரஹனத்தில்
நாம்????

Friday, April 16, 2010

You are in my heart...

           Beautiful feeling throngs the mind,
                                                  Melodies heard through the air.
                               Loneliness leaving a sigh,
Mixture of anger n happiness goes like a flame,
Winning heart rising like a wave,
Fear of losing descending like a fall,
Routine seeks a change,
Change ends in vain,
where my path leads to, puzzle fills my heart.....

தனிமை



அன்று நினைத்தேன் உன்னை காணாமல் இருக்கும் நொடிகள் நரகம் என்று!!!!இன்று உணர்ந்தேன் உன் நினைவுகளுடன் வாழும் தனிமை கூட இனிமை என்று !!!!

புயல்


புயலாய் என் இதயத்தை கடந்து சென்று விட்டாய்,சேதப்பட்டு இருப்பது என் இதயம்
நிவாரணம் உன் இதயம்!!!!

கடற்கரை..





நீ கடற்கரையில் உன் கால்களை புதைத்து சென்றது மண்ணில் மட்டுமல்ல என் மனதிலும்...
வலிமையானவன் நீ, இன்னும் வலி என் இதயத்தில் ஆழமாய் புதைந்ததனால்...

Thursday, April 15, 2010

இடமாற்றம்.

ஏன் கேட்கிறாய் நான் எப்படி இருக்கிறேன் என்று ???உனக்கு தெரியாதா????
துடித்து கொண்டிருந்த என் இதயம் சட்டென்று உன் விழிவழியே இடமாறியதை!!!!

Tuesday, April 13, 2010

நிலவு

 நக்க்ஷத்திரங்களுக்கு  நடுவில் வெண்ணிற ஆடை உடுத்தி  இரவு குளிரில் தூங்காமல் ஒளி வீசும்விளக்கு காத்திருப்பது சூரியனுக்காக!!!   நான்???

நிழல்

                                                      
                                                      
சுட்டெரிக்கும் வெயில்  என்னை சுடவில்லை

நிழலாய் நீ இருப்பதனால்......

சிக்னல்

பிறரை பார்க்க,பேச நேரம் இல்லா மனிதனை ஒரு நிமிடம்


பார்க்க,முணு முணுக்க வைத்த பெருமை சிக்னலுக்கு மட்டும்....

உழவன்

ஊருக்கு விருந்தளித்து விட்டு கஞ்சிக்கு ஏங்கிக் கொண்டிருப்பவன்


ஏழை உழவன்!!!!!!!!!

Monday, April 12, 2010

சுனாமி



சுனாமியா நீ????என்னை கடந்து செல்லும் போதெல்லாம் என்னையும் கடத்தி செல்கிறாயே.....

கண்ணாடி

நான்  என்னை  முகக்கண்ணாடியில் பார்த்ததைவிட உன் கண்ணாடியில் பார்த்ததுதான் அதிகம்...

அலைவரிசை

மொபைல் நீ கம்ப்யூட்டர் நான் உன்னை யாரோ அழைத்தால் கூட நான் நடுங்குகிறேன் இருவரும் ஒரே அலைவரிசை என்பதனாலோ................

இலை

மரக்கிளையாய் நான் இருக்க என்னை விட்டு பிரிந்து உதிரும் இலையாய் நீ இருக்கிறாய்......

நினைவலை

                                             
                                              உன் நினைவலைகளில் சிக்கி தவிக்கும் சங்கு நான்...
என் ஓசையை காது கொடுத்து கேட்க உனக்கு நேரம் இல்லையா????

மழை நீர்

சில்லென்று வீசிய தென்றல் காற்று உணர்த்தியது நீ இல்லாத வெறுமையை  தலைகுனிந்து பூமியை பார்த்தேன்!!!
பூமியில் தேங்கியிருந்த தண்ணீர் சொன்னது நீண்ட நாள் பிரிந்திருந்து சேர்ந்த இனிமையை...

துடிப்பு

நீ என்னை கடக்கும் போதெல்லாம் என் இதயம் இரட்டிப்பாக துடிக்கிறது உன் இதயத்தையும் நான் சுமப்பதனாலோ....

பூட்டியிருக்கும் என் இதயம்



நான் அக்கவ்ன்ட்!!!என்னை லாக் செய்த பாஸ்‌வர்ட் நீ!!!
நீ இல்லாமல் நானே என்னை ஆக்ஸெஸ் செய்ய முடியவில்லையே!!!

இரயில்

இரயில் நீ தண்டவாளம் நான்!!!எத்தனை  முறை என்னை மிதித்து வேகமாய் கடந்து சென்றாலும் பொறுமையாய்காத்திருப்பேன் உனக்காக..

இருள்

                                                                             
                                                                          


அஸ்தமிக்கும் சூரியனுடன் வெளிச்சம் மறைந்து இருள்சூழ்கிறது...நீ என் பார்வையை விட்டு மறையும் போதெல்லாம் தனிமை இருள் என்னை சூழ்கிறது...

ஓளியும் ஒலியும்

ஒளியும் ஒலியும் இல்லாமல் இடி இல்லை
நீ இல்லாமல் நான் இல்லை....

நிஜம்

கனவிலும் உன் நினைவிலும் வாழ்ந்து வாழ்ந்து
நிஜத்தில் வாழ மறந்துவிட்டேன்....

இளைஞன்

நடை உடை பாவனையில் வெள்ளைக்காரன் தாய் நாட்டில் வேலை தேடும் பிச்சைக்காரன் இளைஞன்!!!!!!!!

இசை

 இசை கருவிகள் இன்றி ரம்மியமான இசை மீட்டும் கலைஞர்கள்

கடல் அலையும்,தென்றல் காற்றும்!!!!!

நிழல்

மனிதனுக்கு நிழல் தர மரத்திற்கு மனமுண்டு....

மரத்திற்கு இடம் தர மனிதனுக்கு மனமில்லை...

மலர்

தினமும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் புன்னகைத்து கொண்டே இருக்கும் உன்னத படைப்பு மலர்.......

காதல்

இமைக்க மறந்த கண்களுக்கும் சிந்திக்க மறந்த சிந்தைக்கும் இதயம் சொல்லும் ஆறுதல் காதல்...

நட்பு

இதயத்தை போல துடித்துக் கொண்டே உயிருடன் கலந்திருந்து


கவலைகளை சலவை செய்யும் மாயை, நட்பு!!!!!

அம்மா

பத்து மாசம் கருவறையில்..


இன்று வரை உன் முந்தானைக்கு அடியில் பத்திரமாய்

புதைந்து கிடக்கும் இந்த சுதந்திரம், உன்னிடம் மட்டுமே அம்மா!!!

என் சகோதரி

உன்னை அச்சிட நினைத்திருக்கிறேன் பல முறை, தோல்விகள் மட்டுமே என் வசம்..

உன் கருவறையில் உறங்கவில்லை நான்!!!!

ஆனால் உன் இதயத்தை விட்டு இறக்கியது இல்லை நீ!!!

உனக்கு நிகர் யாரடி???

என்னை பெறாத தாயும் நீதானடி...

அப்பா

இருபது ஆண்டுகள் பாசத்தை உரமாகவும் வியர்வையை நீராகவும் ஊற்றி வளர்த்தாய்.... உன் பிரிவினில் உணர்ச்சியற்று மரமாய் வளர்ந்து நிற்கிறேன் அம்மாவிற்கு மட்டும் நிழலளிக்க.....